பல தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருபவர் பிர்லா போஸ். இவர் சமீபத்தில், வீடு விஷயத்தில் சிலரிடம் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக கூறியிருந்தார். மேலும், அவர் போலீசில் புகாரும் அளித்திருந்தார்.
அதாவது, பிர்லா போஸ் தற்போது குடியிருக்கும் வீட்டை, சிலர் தங்களது சொந்த வீடு என்று கூறி, பணம் பறித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வங்கியில் இருந்து வீட்டை காலி செய்ய சொல்வதால், தன்னிடம் பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறி, நடிகர் பிர்லா போஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, இது தொடர்பாக தான் புகார் கொடுத்ததாகவும், ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ”தான் தற்கொலை செய்துக் கொண்டேன் என தகவல் வந்தால் நம்பாதீர்கள், அது கொலையாக தான் இருக்கும்.” என்று நடிகர் பிர்லா போஸ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...