தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரது இசையமைப்பில் வெளியான ‘பேட்ட’ பட பாடல்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, அனிருத் யாரையோ காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர். அதுமட்டும் இன்றி, அனிருத் பற்றி அவ்வபோது சில சர்ச்சையான தகவல்களும் வெளியாகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் காதலிப்பது குறித்து வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் அளித்த அனிருத், “ரொம்ப நாளாகவே நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். இசையமைப்பாளராக ஆவதற்கு முன் காதலித்தேன்.
இப்போது உள்ள வேலையில் காதலிப்பது சரியாக இருக்காது, அதற்காக இப்படியே இருக்கவும் மாட்டேன், காதல் வரலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன...
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வா முரளியின் சகோதரருமான ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘நேசிப்பாயா’...
‘டிஎன்ஏ' படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததில் இருந்தே அதன் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர்...