நடிகர்கள் மார்க்கெட் குறைந்தால் அரசியலுக்கு போவதும், நடிகைகள் சீரியல் பக்கம் போவதும் வழக்கமான ஒன்றாக இருப்பது போல, நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு ஹீரோயின் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இதற்காகவே பல நடிகைகள் சுமார் 35 வயதுக்கு பிறகு தான் திருமணம் பற்றியே யோசிக்க செய்கிறார்கள். ஆனால் சிலரோ 40 வயதை கடந்தும் திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்ததவர் நக்மா. தற்போது 44 வயதாகும் அவர், சினிமாவுக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில், 44 வயதாகும் நக்மா, தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருப்பதோடு, நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன், என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய நக்மா, ”திருமணம் என் கையில் இல்லை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எனக்கான நேரம் வரும்போது நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...