இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரித்த படம் ‘பரியேறும் பெருமாள்’. அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றதோடு, பல விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில், பரியேறும் பெருமாள் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதை தொடர்ந்து, இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், இப்படத்தை இயக்கும் காந்தி மணிவாசகம், இந்த படத்தில் இமேஜ் இல்லாத புதுமுக நடிகர் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்ததோடு, பல புதுமுகங்களை தேடி அலைந்தார். இறுதியாக மைத்ரே (ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன்) என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்தார்.
கன்னட பரியேறும் பெருமாள் படத்திற்கு ஹீரோவாக தேர்வான மைத்ரேயனை, கதைக்களமான பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கையை ஓட்டியும் இயக்குநர் பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் பழகி அவர்களின் பேச்சு, நடை, உடை, பாவனை அனைத்தையும் கற்றுக் கொண்டு வருகிறார்.
கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு ஏற்ற வகையில் உள்ள கலைஞர்களையும் தேர்வு செய்து வருகிறார்கள். விரைவில் இந்தப் படத்திற்கான துவக்க விழா பெங்களூரில் நடைபெறவிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...