தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். தனது முதல் படமான ‘புதியபாதை’ மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகும் படங்கள் தனி ரகமாக இருக்கும். இவரது மனைவி நடிகை சீதா என்பதும், இவர்கள் இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இதற்கிடையே, பார்த்திபன் - சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவுக்கும், நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுபேரனும், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான நரேஷ் கார்த்திக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
ஏறகன்வே, பார்த்திபன் - சீதா தம்பதியின் இளையமகளான கீர்த்தனாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களது மூத்த மகள் அபிநயாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகர்கள் ராதாரவி, கார்த்தி, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக் கொண்டார்கள்.
பார்த்திபனும், சீதாவும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் மகள்கள் திருமணத்திற்கு தங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டை மறந்து ஒன்றாக கலந்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...