கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்ஸி) இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பெப்ஸி வேலை நிறுத்தத்தை தொடங்கியது. பிறகு பேச்சுவார்த்தை நடந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், திரைப்படம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் திரைப்பட தொழிலில் பங்கேற்கலாம், என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெப்ஸி அமைப்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியதோடு, இன்று (செப்.05) சென்னை கண்டன ஆர்பாட்டத்தையும் நடத்த திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி அமைப்பினரிடையே நேற்று இரவு பேச்சு வார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலமாக, பெப்ஸி அமைப்பு இன்று நடத்த இருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டதோடு, வரும் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...