’கொலையுதிர் காலம்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் நயன்தாராவை இழிவாக பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து அவர் நடிகைகளை இழிவாக பேசினால், அவருக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், திமுக-வும் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டது.
நடிகைகள் பலர் ராதாரவியை கலாய்க்கும் விதத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.
இதற்கிடையே, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்திருக்கும் ராதாரவி, நயன்தாராவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி, இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ராதாரவி நயன்தாராவை பேசியதை வைத்து இந்த மாதிரியான வார்த்தைகளை நான் ஏற்கமாட்டேன். நேரடியாக சென்று அறைந்துவிடுவேன்.
நயன்தாரா கண்ணியமான பெண், ஆனால் நான் கொடூரமான பெண்.” என்று தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...