மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக பலர் போட்டி போட்டு வருகிறார்கள். பெண் இயக்குநர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய், கெளதம் மேனன் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் படமாக எடுத்து வருகிறார்கள்.
இதில், விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வர, முழு படத்தையே முடிக்க கூடிய பட்ஜெட்டே, ஒரு நடிகையின் சம்பளமா!, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே அதிர்ச்சியடைந்துள்ளது.
தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடித்து வரும் கங்கனா ரணாவத், இப்படம் முடிந்த பிறகு தலைவி படப்பிடிப்பில் பங்கேற்பாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...