சினிமா வாய்ப்பு குறைந்த பிறகு நடிகர்கள் அரசியலுக்கு போவது தான் வழக்கமாக இருந்த நிலையில், தற்போது நடிகைகளும் அரசியல் கட்சியில் இணைவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்த நக்மா மற்றும் குஷ்பு இருவரும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிரபல இந்தி நடிகை ஊர்மிளாவும் தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளார்.
’ரங்கீலா’ இந்தி படம் மூலம் பிரபலமான ஊர்மிளா, தமிழில் ‘இந்தியன்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர், தற்போது பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் நிலையில், காங்கிரஸில் இணைந்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், நடிகை ஊர்மிளா காங்கிரஸில் இணைவது குறித்து, மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து பேசினார்.
இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், அட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றும்படி வாழ்த்தினார்.
மேலும், வரும் பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...