ரசிகர்களின் அன்பு தொல்லை தாங்க முடியாமல் சினிமா பிரபலங்கள் பலர் அவர்களது செல்போனை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபல நடிகர் தன்னை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் பாலகிருஷ்ணா, தற்போது ஆந்திர தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில், ஆந்திர மாநிலம், ஹிந்துபூர் தொகுதியில் எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடும் அவர், தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணாவை பத்திரிகையாளர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்ற போது, கோபமான அவர், பத்திரிகையாளர் கன்னத்தில் அறைந்தார். மேலும், “உன்னை கொலை செய்துவிடுவேன், எனக்கு குண்டு வீசவும் தெரியும், கத்தி வீசவும் தெரியும்” என்றும் மிரட்டியுள்ளார்.
பாலகிருஷ்ணாவின் இந்த அடாவடி தனத்தையும், கொலை மிரட்டலையும் மற்றொரு நிருபர் தனது செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ,
Actor and #TDP Hindupur MLA, #Balakrishna issuing death threats to journalists. #Elections2019 #YSRCP #nbk #Congress #BJP #JSP pic.twitter.com/MBWn5xCv5u
— Rahul Devulapalli (@rahulscribe) March 27, 2019
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...