தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த உடனே குடும்ப பிரச்சினை காரணமாக, கோடம்பாக்கத்தை விட்டு வெளியேறிய அஞ்சலி, தெலுங்கு தேசத்தில் தஞ்சம் அடைந்ததோடு, அங்கே நடிகர் ஒருவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்பட்டது.
பிறகு குடும்ப பிரச்சினைகள் தீர்ந்த நிலையில், மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியவர், தற்போது ஏராளமான பட வாய்ப்புகளுடன் மீண்டும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, அவ்வபோது அஞ்சலி குறித்து காதல் கிசிகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவர் நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும், இருவரும் திருமண்ம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு ஜெய் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், அஞ்சலியையும் அவர் மதம் மாற சொல்வதாகவும், இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அஞ்சலி - ஜெய் தற்போது சமாதானமாகிவிட்டதோடு, விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருமணத்திற்குப் பிறகு அஞ்சலி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதை மறுத்திருக்கும் அஞ்சலி, திருமணம் என்ற தகவல் பொய்யானது, அப்படியே திருமணம் செய்துக் கொண்டாலும் நடிப்பை தொடர்வேன், நிறுத்த மாட்டேன், என்று கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...