’சர்கார்’, ‘மாரி 2’ ஆகிய படங்களை தொடர்ந்து வரலட்சுமி நடிப்பில் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் வரலட்சுமி பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது ‘ரணம்’ என்ற கன்னடப் படத்தில் சிபிஐ கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார். வி.சமுத்ரா என்பவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக நடிகர் அர்ஜுனின் சகோதரின் மகன் சிரஞ்சீவி சர்ஜூன் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது. அக்காட்சியில் இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் அருகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி வெடித்து சிதறியது.
அதனால் வேடிக்கை பார்க்க வந்த ஐந்து வயது சிறுமியும் அவரது அம்மாவும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...