Latest News :

பிரபல இயக்குநர் மகேந்திரன் மரணம்!
Tuesday April-02 2019

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மகேந்திரன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

 

1966 ஆம் ஆண்டு வெளியான ‘நாம் மூவர்’ படத்திற்கு வசனம் எழுதி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மகேந்திரன், தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்த நிலையில், 1978 ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ படம் இயக்குநராக அறிமுகமானர். அப்படத்தை தொடர்ந்து ’உதிரிப்பூக்கள்’, ‘ரிஷிமூலம்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘மெட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இறுதியாக 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு பஞ்சாயத்து’ படம் தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘காமராஜ்’ படம் மூலம் நடிகராக சினிமாவில் பயணிக்க தொடங்கினார்.

 

விஜயின் ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர், தொடர்ந்து ’நிமிர்’, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’, ‘சீதக்காதி’, ‘பேட்ட’, ‘பூமராங்’ ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

 

இதற்கிடையே, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மகேந்திரனின், வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பு இயக்குநர் மகேந்திரன் அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணிக்கு வைக்கப்படுகிறது. இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மகேந்திரனுக்கு ஜான் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

Related News

4498

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery