தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வந்த மகேந்திரனை, ஒரு நடிகராக தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியது விஜயின் ‘தெறி’ படம் தான். இயக்குநர் அட்லீயின் அன்பு வேண்டுகோளை ஏற்று அப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் மாஸ் வில்லனாக நடித்திருந்தார்.
‘தெறி’ படப்பிடிப்பின் போது விஜயை மகேந்திரன் நாற்காலி ஒன்றில் கட்டிப் போட்டுவிட்டு அவரிடம் வசனம் பேசுவது போலவும், அப்போது விஜய் அந்த நாற்காலியை உடைத்துக் கொண்டு சண்டை போடுவது போன்றும் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
விஜயை கட்டிப்போட வைத்திருந்த நாற்காலியில் ஏகப்பட்ட ஆணிகள் அடித்திருந்ததை பார்த்த இயக்குநர் மகேந்திரன், “விஜய் ஆணியுடன் மட்டும் விளையாடாதீங்க, ஒரு ஆணி குத்தினால், அது செப்டிக்காகி பல துன்பங்களையும் கொடுக்கும்” என்று செல்லமாக கண்டித்ததாக, முன்னணி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
அதேபோல், விஜையும் மகேந்திரனிடம் வந்து இந்த இடம் உங்களுக்கானதாக இல்லை, என்று தானே நினைக்கிறீர்கள், என்று கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
‘தெறி’ படத்திற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் மகேந்திரன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...