தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள மோகன் பாபு, தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து ‘சலீம்’ என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தை ஒய்விஎஸ் செளத்ரி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் ஒய்விஎஸ் செளத்ரி, ‘சலீம்’ படத்திற்காக தனக்கு ழங்கப்பட்ட செக் செல்லுபடி ஆகததால், இது குறித்து மோகன் பாபுவிடம் கேட்க, அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. உடனே இது தொடர்பாக நீதிமன்றத்தில் இயக்குநர் செளத்ரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், நடிகர் மோகன் பாபுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், 41 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவலை மறுத்திருக்கும் மோகன் பாபு, தனது ட்விட்டர் பக்கத்தில், சில தொலைக்காட்சிகள் பொய்யான செய்திகள் பரப்புவதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் ஐதராபாத்தில் உள்ள என் வீட்டில் இருக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...