நடிகை, நடிகர் சிலர் குடி போதையில் வாகனம் ஓட்டுவதும், போலீசிடம் சிக்குவதும் அவ்வபோது நடக்கின்றது. நடிகர் ஜெய், நடிகை காயத்ரி ரகுராம் போன்றவர்கள் இதுபோன்ற விவகாரங்களில் ஈடுபட்ட நிலையில், தற்போது நடிகை ஒருவர் மது போதையில் போலீசாரையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த மாடல் அழகியும், டிவி நடிகையுமான ரூகி சிங், கடந்த 31 ஆம் தேதி தனது இரண்டு ஆண் நண்பர்களுடன் ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது குடி போதையில் இருந்த நடிகை ரூகி சிங், ஓட்டல் ஊழியர்களுடன் தகராரில் ஈடுபட்டதால், போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
இந்த நிலையில், மது போதை தலைக்கேறியதால் நடிகை ரூகி சிங், போலீஸ்காரர்களின் ஆடைகளை பிடித்து இழுத்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன் பின், தனது நண்பர்களுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டவர், சான்டாக்ரூஸ் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் மீது மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நள்ளிரவு நேரம் என்பதால் நடிகை ரூகி சிங்கை கைது செய்யாமல், அவர் மீது சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...