சென்னையை சேர்ந்த ரெஜினா கெசண்ட்ரா, 2005 ஆம் ஆண்டு வெளியான ‘கண்டநாள் முதல்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ‘அழகிய அசுரா’ படத்தில் நடித்தவர், பிறகு கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிப் படங்களில் பிஸியானவர், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மூலம் மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கினார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியாக நடித்து வரும் ரெஜினா, தெலுங்கு சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, ரெஜினா தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாக தெலுங்கு ஊடகங்கள் அவ்வபோது செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரெஜினா காதலிக்கும் நடிகர் சாய் தரம் தேஜ் என்பது தெரிய வந்துள்ளது. சாய் தரம் தேஜும், ரெஜினாவும் ‘பில்லா நுவ்வு லேனி ஜீவிதம்’ படத்தில் ஜோடியாக நடித்தார்கள். பல வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளியானாலும், அப்போதில் இருந்தே இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகி வந்தவர்கள், தற்போது காதலர்களாகி விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவலை ரெஜினா மற்றும் சாய் தரம் தேஜ் இருவரும் மறுத்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...