Latest News :

கதைக்காக இதை கூட செய்வேன்! - மீரா மிதுனின் அதிரடி ஸ்டேட்மெண்ட்
Friday April-05 2019

மாடலிங் துறையில் சாதித்த மீரா மிதுன், தற்போது சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதற்காக, நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் இவருக்கு தீனி போடும் விதத்தில் சிக்கியிருக்கிறது ’போதை ஏறி புத்தி மாறி’ படம்.

 

இப்படம் குறித்து மீரா மிதுனிடம் கேட்டதற்கு, “சீட் நுணியில் உட்கார வைக்கும் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் அர்த்தமுள்ள கதாபாத்திரமாக உள்ளது. தலைப்புக்குண்டான சம்மந்தத்தை படத்தின் கிளைமாக்ஸில் தான் ரசிகர்கள் அறிவார்கள். 

 

இயக்குநர் கே.ஆர்.சந்துரு குறும்பட இயக்குநர். கதை சொன்ன உடனே இந்த ரோலை செய்துவிட வேண்டும் என்று தோணுச்சு.

 

படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமான வேலையை செய்யக்கூடிய கதை இது. கவிதை மாதிரி படத்தின் காட்சிகளை பாலசுப்ரமணியம் படம்பிடித்திருக்கிறார்.” என்றார்.

 

தற்போது, மூன்று முக்கிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வரும் மீரா மிதுன், கதைக்காக மொட்டை அடிக்கவும் தயார், என்று தைரியமாக சொல்கிறார்.

 

அதுமட்டும் அல்ல, மீரா தேசிய விருது வாங்க வேண்டும், என்று அவரது தந்தை கனவு கண்டாராம். ஆனால், அவர் தற்போது இல்லை. அவரது கனவை நிஜமாக்கும் விதத்தில் கதை அமையும் பட்சத்தில், அந்த படத்தில் சம்பளமே வாங்கமல் நடிப்பேன், என்றும் கூறுகிறார்.

 

இப்படி தைரியமாக கதைக்காக அனைத்தையும் செய்யும் இவர், கவர்ச்சியில் எப்படி, என்று யோசிப்பது புரிகிறது. மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுனுக்கு கவர்ச்சி எல்லாம் ஜுஜிப்பி போல. 

 

தமிழ்ப் பெண்ணாக இருந்தாலும், கதையின் முக்கியத்துவத்தைப் பொருத்து கவர்ச்சியில் தாராளம் காட்டவும் ரெடி, என்று கூறுகிறார் இந்த சென்னை பெண்.

Related News

4533

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery