தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனக்கென்று தனி பாதை வகுத்துக் கொண்டு பயணிக்கிறார். ரசிகர்கள் வேண்டாம் என்று கூறியவர், தனது பட விழாக்களில் கூட கலந்துக் கொள்வதில்லை. அதேபோல், எந்த தொலைக்காட்சிக்கும் அஜித் தற்போது பேட்டி கொடுப்பதில்லை.
ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்த அஜித், பத்திரிகையாளர்களையும் வருடத்திற்கு இரண்டு முறை சந்தித்து வந்தார். தற்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
எதனால் அஜித், இப்படி ஒதுங்கிப் போகிறார், என்று பலர் பல விதத்தில் யோசித்தாலும், யாருக்கும் உண்மையான காரணம் மட்டும் தெரியவில்லை.
இந்த நிலையில், அஜித் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் பேச மறுப்பதற்கான காரணத்தை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான கோபிநாத் தெரிவித்திருக்கிறார்.
அஜித்தை கோபிநாத் பேட்டி எடுத்த போது இது குறித்து அவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அஜித், “சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக பேசினேன், அப்போது ஒரு மாதிரி பேசினார்கள்.
சரி ஆங்கிலத்தில் பேசினேன், ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசுவதா? என்று அதற்கும் திட்டினார்கள்.
இனி பேசவே வேண்டாம் என்றேன், அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்.” என்று கூறியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...