’பேட்ட’ யை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரஜினியின் புதிய படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை ரஜினி தரப்பு மறுத்திருக்கிறது.
மேலும், ரஜினிகாந்தின் 167 படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக வெளியான தகவல் மற்றும் செய்திகள் அனைத்தும் பொய். இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரபரப்ப வேண்டாம், என்றும் ரஜினி தரப்பு கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முழுவதுமாக முடிவடைந்த பிறகு, ரஜினியின் 167 வது பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களை படக்குழுவி வெளியிட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...