இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிப்பில், சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.கே.நகர்’ படம் இம்மாதம் 12 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீட்டுக்கு சிலர் தடை போட்டிருக்கிறார்கள்.
படம் அரசியல் படம் என்பதால், தேர்தலுக்கு பிறகு ரிலீஸ் செய்துகொள்ளுமாறு சிலர் வெங்கட் பிரபுவிடம் கூறியிருக்கிறார்கள். அதன்படி, அவரும் தேர்தலுக்கு பிறகு படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
அதே சமயம், படத்தை ரிலீஸ் செய்ய கூடாது, என்று தன்னி நிர்பந்தித்தவர்களின் பெயர்களை சொல்ல விரும்பாத வெங்கட் பிரபு, நாங்கள் செய்யாத தவறுக்காக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ‘ஆர்.கே.நகர்’ அரசியல் படம் அல்ல, பொழுதுபோக்கான படம், என்று தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில், அரசியல் காரணங்களுக்காக வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சில அரசியல் கட்சிகள் செய்திருப்பது மட்டும் தெரிகிறது.
இது தொடர்பான வெங்கட் பிரபுவின் வீடியோவை பார்க்க,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...