தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்த், தனது புது படம் ரிலீஸின் போது, அரசியல் குறித்து எதாவது பேசி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். தற்போது அவரது புது படமான ‘தர்பார்’ படத்தின் பஸ்ட் லுக் வெளியாகியிருப்பதோடு, அப்படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்குகிறது.
இதற்கிடையே, மும்பை செல்வதற்கு முன்பு சென்னையில் நிருபர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை புகழ்ந்து வரவேற்றிருக்கிறார். ரஜினிகாந்தின் இத்தகைய பேட்டிக்கு தமிழக அரசியல் கட்சிகள் பெரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், ரஜினிகாந்த் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இது குறித்து அரியலூரில் நேற்று நிருபர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ரஜினிகாந்த் பேட்டியை பார்த்து, எனக்கு அதிர்ச்சியோ, வியப்போ இல்லை. ரஜினிகாந்த், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு இது மேலும் ஒரு சான்று. ரஜினிகாந்த்தின் நிலைப்பாடு மக்களிடம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...