Latest News :

”தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இது தெரியவில்லையே!” - வருத்தப்படும் ஆண்ட்ரியா
Wednesday April-10 2019

‘தரமணி’ மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்த ஆண்ட்ரியா, முதல் முறையாக ’மாளிகை’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நிகழ்காலம் மற்றும் சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் காவல் துறை அதிகாரியாகவும், மகாராணி என இரண்டு கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

 

சாந்தி பவானி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார்.

 

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில் ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரியா, “இந்த படத்தை கன்னிடத்தில் தான் எடுக்க இருந்தார்கள். பிறகு தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆண்ட்ரியாவுக்கு தமிழில் மார்க்கெட் இருப்பதாக கூறி, தமிழிலேயே எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். கன்னட இயக்குநருக்கும், மும்பை தயாரிப்பாளருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருப்பதாக தோன்றியதற்கு நன்றி, ஆனால், இங்கு இருக்கும் இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இது தோன்றவில்லையே!, நான் நிறைய இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்த படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்த படத்தில் நான் நடிக்க உடனே ஓகே, சொன்னதற்கு காரணம், இரட்டை வேடம் தான். ஹீரோக்களுக்கு இரட்டை வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் வரும், ஆனால் ஹீரோயின்களுக்கு அது குறைவு. அதனால் தான் நான் உடனே ஓகே சொன்னேன். ரசிகர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

 

Maaligai Teaser Launch

 

இயக்குநர் தில் சத்யா பேசுகையில், “இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என்றார்.

 

இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்.” என்றார்.

 

விஜய் ஆண்டனி பேசுகையில், “நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக் கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.” என்றார்.

Related News

4566

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery