உதவி இயக்குநர்களின் கதையை திருடுவதாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அவ்வபோது குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், தற்போது தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவருக்கு அவர் கைகொடுக்க முன் வந்திருக்கிறார்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ ஆகிய படங்களை இயக்கினார். இதற்கிடையே விபத்தில் சிக்கிய சரவணன், பல மாதங்கள் ஓய்வில் இருந்தார்.
தற்போது மீண்டும் படம் இயக்க முயற்சித்து வந்த இயக்குநர் சரவணனுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைகொடுத்திருக்கிறார். அவர் லைகா நிறுவனத்திடம் பேசி சரவணனுக்கு பட வாய்ப்பு பெற்று தந்ததோடு, அந்த படத்திற்கு கதையும் எழுதி கொடுக்கிறாராம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் திரிஷா நடிக்க, பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...