‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார். இதில், கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றுக்கு மணிரத்னம் கதை, வசனம் எழுத, அப்படத்தை அவரிடம் உதவியாளராக இருந்த தனா என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
கதை, வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். அமரன் கலையை நிர்மாணிக்க, ஏகா லகானி ஆடை வடிவமைப்பு பணியை செய்து வருகிறார்.
’வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...