சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்.ஜி.கே’ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘காப்பான்’ பட டிரைலரில் “போராட்டம் நடத்துறது தப்புனா, போராடும் சூழ்நிலையை உருவாக்குனதும் தப்பு தான்” என்று சூர்யா வசனம் பேசியிருக்கிறார்.
இந்த வசனம், நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பதாக இருப்பதாக, கூறி வருகின்றனர். காரணம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசிய போது, “எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால், தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்” என்று கூறியிருந்தார்.
ஆக, போராட்டம் வேண்டாம் என்று கருத்து கூறிய ரஜினிகாந்தை விமர்சிக்கும் விதத்தில் தான், ‘காப்பான்’ படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்துள்ளதாக பேசப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...