ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிரிப்பில், எல்.சுரேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நீயா 2’. வித்தியாசமான பாம்பு படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்க, ஹீரோயின்களாக வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோர் நடிக்க முக்கிய வேடம் ஒன்றில் ராஜநாகம் ஒன்றும் நடித்திருக்கிறது.
ஜெய்யும், ராய் லட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, ஜெய்க்கு கேத்தரின் தெரசாவுடன் திருமணம் நடைபெறுகிறது. இதை அறியும் ராய் லட்சுமி ஜெய்யை தேடி வர, ஜெய்யும், அவரது மனைவியான கேத்தரின் தெரசாவும் படுக்கையில் சந்தோஷமாக இருப்பதை பார்த்துவிட்டு கோபமடைகிறார். கோபமடைந்த ராய் லட்சுமி, அவர்களை என்ன செய்தார்? என்பதே அடுத்தக் காட்சியின் தொடர். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் ட்விஸ்ட்டை வைத்து சுவாரஸ்யமாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் எல்.சுரேஷ், இப்படத்தில் நான்காவது ஆளாக வரும் வரலட்சுமி வேடத்தில் மிகபெரிய ட்வீஸ்ட் வைத்திருக்கிறார்.
தனது காதலனை அடைந்தே தீருவேன் என்பதில் தீவிரமாக இருக்கும் ராய் லட்சுமி, எப்படிப்பட்ட கஷ்ட்டம் வந்தாலும் கணவனை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கேத்தரின் தெரசா, காலம் காலமாக காத்திருக்கும் வரலட்சுமியின் வைராக்கியம் மற்றும் ஜெயின் தியாகம், என்று பரபரப்பான அதே சமயம் கலர்புல் படமாகவும் உருவாகியிருக்கும் ‘நீயா 2’ வரும் மே 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...