தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடைபெற உள்ளது. மக்கள் அனைவரையும் வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறது.
இந்த நிலையில், விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த எந்த இடத்தில் இருக்கும் பூத்களில் வாக்களிக்க போகிறார்கள் என்பது தெரியுமா?
இதோ அந்த லிஸ்ட்,
கமல்ஹாசன், ஸ்ருதி ஹாசன், திரிஷா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள பூத்தில் வாக்களிக்கிறார்கள்.
விஜய் சின்ன நீலாங்கரையிலும், அஜித் திருவான்மியூரிலும் வாக்களிக்கிறார்கள். விஜயகாந்த் காவேரி தெரு, சாலிகிராமத்தில் வாக்களிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் சாமியார் மடம், அசோக் நகரிலும், சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்திலும் வாக்களிக்கிறார்கள்.
சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவகுமார், டி.ராஜேந்திர, சிம்பு மற்றும் அவர்களது குடும்பத்தார் தி.நகரில் உள்ள பூத்தில் வாக்களிக்கிறார்கள்.
ராகவா லாரன்ஸ் அசோக் நகரிலும், பார்த்திபன் கே.கே.நகரிலும் வாக்களிக்கிறார். நடிகர் பாபி சிம்ஹா ராமாபுரத்தில் வாக்களிக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...