தமிழ் சினிமாவின் சச்சை மன்னனான சிம்பு, எதாவது சர்ச்சையில் சிக்குவதும், வம்பில் மாட்டுவதும் என்றிருந்த நிலையில், தற்போது அனைத்தையும் குறைத்துக் கொண்டு படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
அதேபோல், மக்கள் நல குறித்தும், சமூக விழிப்புணர்வு குறித்தும் பேசி வரும் சிம்பு, தேர்தல் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆர்வமாக வாக்கு செலுத்தியதோடு, வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் கூற, சிம்பு மட்டும் மிஸ்ஸிங்.
சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்த தி.நகர் பகுதி வாக்குச் சாவடியில் தான் சிம்புவும் ஓட்டு போடுவார் என்பதால், அவர் வருவர் என்று பத்திரிகையாளர்கள் எதிர்ப்பார்த்திருக்க, சிம்பு வராமல் ஓட்டு போடுவதை தவிர்த்துவிட்டார்.
சிம்பு ஓட்டு போடுவதை தவிர்த்தது ஏன்? என்று கேள்வி எழ, அதற்கு அவரது தந்தையும், நடிகரும், அரசியல் தலைவருமான டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு ஓட்டு போடாததற்கான காரணத்தை கூறிய டி.ஆர், சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறியதில்லை. ஆனால், தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். அவரால் வர முடியாத சூழ்நிலை. அதனால் தான் வரவில்லை, என்று தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...