‘அட்ட கத்தி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா.இரஞ்சித், தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ என்று வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் தற்போது வட இந்திய போராளி ஒருவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சாபில் பா.இரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து உடனடியாக, தனது இரண்டாவது படமாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ் ஹீரோவாகவும், ஆனந்தி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கும் இப்படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
படத்தின் முதல் கட்டப்பணிகள் இன்று தொடங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...