திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர், தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை ‘பாபநாசம்’ பட இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்குகிறார். இதில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா - தம்பியாக நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தில், கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்திக்கு சத்யராஜ் அப்பாவாக நடித்திருந்தாலும், நடிகை ஜோதிகாவுக்கு அவர் அப்பாவாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...