ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், அப்படம் ரிலிஸூக்கு முன்பு கதை திருட்டு விவகாரம் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. பிறகு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய பஞ்சாயத்தில், சம்மந்தப்பட்ட உதவி இயக்குநருக்கு பெரும் தொகை ஒன்று இழப்பீடாக வழங்கப்பட்டதோடு, அவரது பெயரும் படத்தின் டைலில் கார்டில் போடப்பட்டது.
இதற்கிடையே, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 63 வது படமும் தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விளையாட்டுத் துறையில் நடைபெறும் ஊழலை பற்றி படம் பேசுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறும்பட இயக்குநர் செல்வா, என்பவர் ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதோடு, படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நன் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனங்களில் கூறினேன். தற்போது அட்லீ இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே படத்தின் படப்பிடிப்பு தடை விதிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.
23 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர உள்ள இந்த வழக்கு குறித்து விளக்கம் கேட்டு ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...