தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ள நயன்தாரா, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரியின் தென்னிந்திய விளம்பர தூதராக ஒப்பந்தமாகியிருப்பதையும், விரைவில் அவர் தனிஷ்க் ஜுவல்லரி தொடர்பான விளம்பரப் படங்களில் நடிக்க இருக்கும் செய்தியை நாம் பார்த்தோம்.
இந்த நிலையில், முன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றான கலர்ஸ் டிவி நயன்தாராவை வளைத்துள்ளது. முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து நிகழ்ச்சி நடத்துவதில் தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டு நிலவுவதால், பல சேனல்கள் பெரிய நடிகர் நடிகைகளுக்கு வலை வீசி வருகிறார்கள்.
அந்த வகையில், விரைவில் நயன்தாராவை கலர்ஸ் டிவி-யில் பார்க்கலாம், என்று அந்த தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதே சமயம், நயன்தாரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாரா அல்லது பேட்டி கொடுக்கப்போகிறாரா, என்ற எந்த தகவலையும் கலர்ஸ் வெளியிடவில்லை.
Nayanthara on Colors Tamil???
— Colors Tamil (@ColorsTvTamil) April 19, 2019
Stay tuned to know more.. #ColorsTamil | #NayanonColorsTamil | #Staytuned pic.twitter.com/wgQSTbsOYD
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...