‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்காக நேற்று சென்னைக்கு வந்தவர், தனது ஓட்டைப் பதிவு செய்தார்.
இதற்கிடையே, இன்று மீண்டும் மும்பை சென்ற ரஜினிகாந்த் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு எப்போது வருவீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன்.” என்றார்.
மேலும், மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? என்று கேட்டதற்கு, இந்த கேள்விக்கு மே 23 ஆம் தேதி பதில் தெரிந்துவிடும், என்றார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...