தமிழ் சினிமாவில் எப்போதும் வெற்றி பார்முலா என்றால் அது பேய் படங்கள் தான். அதிலும், தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய டிரெண்டாகியுள்ள பேய் படங்களில் முன்னணி ஹீரோக்களும், ஹீரோயின்களும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால், பேய் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இப்படி முன்னணி ஹீரோயின்களும், ஹீரோக்களும் பேய் படங்களுக்கு காத்துக் கொண்டிருக்க, நடிகை ஒருவரோ பேய் படங்கள் என்றாலே அலறியடித்து ஓடுகிறாராம்.
அவர் வேறு யாருமல்ல லட்சுமி ராய் என்ற தனது பெயரை தற்போது ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டவர் தான்.
காஞ்சனா, சவுகார்பேட்டை என சில பேய் படங்களில் நடித்திருக்கும் ராய் லட்சுமிக்கு தொடர்ந்து பேய் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறதாம். ஹீரோக்களுடன் டூயட் பாடி கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வர நினைத்தால், இப்படி பேய் பிடித்து ஆட வைக்கிறார்களே, என்று பீல் பண்ணும் ராய் லட்சுமி, இனி பேய் படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம்.
அதனால், தன்னை தேடி வந்த இரண்டு பட வாய்ப்புகளை நிராகரித்தவர், நடிக்காமல் வீட்டில் சும்மா இருந்தாலும் இருப்பேன், பேய் படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன், என்று கூறி பேய் கதை சொல்பவர்களை பேயாகவும் விரட்டியடிக்கிறாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...