சினிமாவில் ஹீரோக்கள் மட்டும் இன்றி காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களும் கோடி கணக்கில் சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள். தற்போதைய தமிழ் சினிமாவில் சாதாரண காமெடி நடிகர்கள் கூட ஒரு நாளைக்கு லட்சக் கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள்.
ஆனால், சீரியல்களில் நடிப்பவர்களின் வாழ்க்கை இதற்கு எதிர்மறையாக இருப்பதாக கூறப்படுகிறது. சீரியல் நடிகர்களுக்கு மிகவும் குறைந்த தொலையே சம்பளமாக வழங்கப்படுவதோடு, சினிமாவில் நடிகர்களுக்கு கிடைப்பது போன்ற சலுகைகளும் கிடைப்பதில்லையாம்.
இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ, 150 ரூபாயுடன் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பதற்கு ஸ்ரீ சாதாரணமானவர் அல்ல, அவர் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் ஒருவரின் வாரிசு ஆவார்.
ஆம், பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் தான் ஸ்ரீ. ஆரம்பத்தில் சில தமிழ்த் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஸ்ரீ, தற்போது முழுக்க முழுக்க சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ஸ்ரீ தனித்து வருகிறார்.
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஸ்ரீக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.16 ஆயிரமாம். ஆனால், அவர் நடிக்க வந்த புதிதில் 150 ரூபாய் வாங்கிக் கொண்டு நடித்தாராம். தற்போது அவர் நடிக்க வந்து 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், ஒரு நாளைக்கு ரூ.16 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...