தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், கமல்ஹாசனின் தூண்டுதலின் பேரிலேயே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் போட்டியிட்டதாக கூறப்படும் நிலையில், கமலுடனே விஷால் மோதும் காலம் வந்துவிட்டதாகவும் சிலர் கூறி வருகிறார்கள். ஆனா, இந்த மோதல் சினிமாவில் அல்ல அரசியலிலாம்.
ஜெயலலிதா மறைவினாலும், கருணாநிதி உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாலும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் தனது ரசிகர்களை அழைத்து அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பேசி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களை கூறி வந்த கமல்ஹாசனும், தற்போது நேரடியாக அரசியல் குறித்து பேசுவதோடு, தனது ரசிகர்களை அரசியலில் ஈடுபட தயாராக இருக்கும்படியும், கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், விஷால் சத்தமே இல்லாமல் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அம்மா பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ள விஷால் அதன் மூலம் நலிந்த சினிமா கலைஞர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதோடு, ஏழை எளிய மாணவர்களுக்கும் பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் அரசியல் தொடர்பான பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை விஷால் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் இது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.
அப்படி விஷால் அரசியலில் ஈடுபட்டால், அரசியலில் ஈடுபடும் கமல்ஹாசனுடன் அவர் மோத வேண்டியதாகிவிடும். அதே சமயம், கமல்ஹாசனும் விஷால் இணைந்துவிட்டால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதும் நிச்சயமே.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...