தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்.
முதல் படத்திலேயே தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ என இரண்டு பொருப்புகளை ஏற்று, இரண்டிலும் வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை தயாரிக்கவும் செய்தார். இதற்கிடையே, ’சைத்தான்’, ‘அண்ணாதுரை’, ‘காளி’, ‘திமிரு புடிச்சவன்’ என விஜய் ஆண்டனியின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால் அவர் பல கோடி கடனாளியாகிவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, கடன் சுமையில் சிக்கி தவிக்கும் விஜய் ஆண்டனி, இனி சொந்தமாக படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையின் பெரும் செல்வந்தர்கள் வாழும் பகுதியான போட் கிளப்பில் புதிய வீடு ஒன்றை கட்டி விஜய் ஆண்டனி குடியேறியுள்ளார். ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் பல அதிநவீன வசதிகள் உள்ளதாம்.
இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், பல கோடி கடனளில் சிக்கி தவித்த விஜய் ஆண்டனி, எப்படி இத்தனை கோடிகளில் வீடு கட்டின்னார், என்று ஒட்டுமொத்த கோலிவுட்டே அதிர்ச்சியில் உரைந்துவிட, வீடு கட்டிய கடனை தான் படம் எடுத்ததாக சொல்லிவிட்டாரோ, என்றும் பேசி வருகிறார்களாம்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...