ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்திருக்கும் ‘காஞ்சனா 3’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மிகப்பெரிய ஓபனிங் ‘காஞ்சனா 3’ படத்திற்கு கிடைத்திருக்கிறது. மேலும், படம் வெளியான 2 நாட்களில் ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதற்கிடையே, படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரசிகர் ஒருவர், கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட் அவ்டுக்கு பாலபிஷேகம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், ரசிகரின் பாலிபிஷேகம் வீடியோவை பார்த்த லாரன்ஸ், பெரும் வருத்தமடைந்ததோடு, தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
இது குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரசிகர் ஒருவர் இதுபோன்று கிரைன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். எனது ரசிகர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செய்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த உங்களது வாழ்க்கையை பணயம் வைக்கும் இது போன்ற செயல்கள் தேவையில்லை. உங்களளுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது. இதுபோன்று செய்வதற்கு முன்பாக அவர்களை பற்றி சிந்தியுங்கள்.
ஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், தேவையான குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.
எனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களை மறுபடி செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம்.” என்று தெரிவித்துள்ளார்.
#காஞ்சனா3 படத்தை பக்தியுடனும், பாசத்துடனும் கொண்டாடும் ரசிகர்கள்!
— CinemaInbox (@CinemaInbox) April 21, 2019
உச்சத்தை தொட்ட @offl_Lawrence#BlockBusterKanchana3#Kanchana3MassiveCollection@Vedhika4u @OviyaaSweetz @nikkitamboli @sooriofficial#KovaiSarala @ActorSriman @Kabirduhansingh @AntonyLRuben @vetrivisuals pic.twitter.com/ltkssRcPDG
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...