வெற்றி பெற்றவர்களுடன் மட்டுமே இணைய விரும்பும் ஹீரோக்கள் மத்தியில் தொடர்ந்து இரண்டு தோல்விப் படங்களை கொடுத்த இயக்குநர் ஒருவருடன் இணைந்திருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘நெருப்புடா’ நாளை வெளியாக உள்ள நிலையில், அவர் அடுத்ததாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை இயக்கும் தினேஷ் செல்வராஜ், ஏற்கனவே ‘கத்திக்கப்பல்’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ ஆகியப் படங்களை இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவிய நிலையில், இவருக்கு மூன்றாவது வாய்ப்பாக விக்ரம் புரபுவின் கால்ஷீட் அமைந்திருக்கிறது.
தினேஷ் செல்வாஜ் இயக்கிய ‘கத்திக்கப்பல்’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. அவரது மூன்றாவது படமான இப்படம் பிரம்மாண்டத்திற்கு பேர்போன தாணுவின் தயாரிப்பு என்பதாலும், விக்ரம் பிரபு ஹீரோ என்பதாலும், தவறவிட்ட வெற்றியை இந்த முறை தினேஷ் செல்வராஜ் கெட்டியாக பிடித்துக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் தினேஷ் செல்வராஜ், பிரபல கதையாசிரியர் செல்வராஜின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...