நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், அவர் தற்போது விசாகன் வணங்காமுடி என்ற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.
தொழிலதிபராக இருந்தாலும் விசாகனுக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில், குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விசாகன் நடித்தார்.
இதற்கிடையே, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விசாகன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மை தான் என்று நம்பந்தகுந்த வட்டாரங்கள் கூறி வரும் நிலையில், இந்த வாய்ப்பை விசாகனுக்கு பெற்று தந்ததே ரஜினிகாந்த் தானாம். தனது மாப்பிள்ளைக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை பார்த்து அவரை ஹீரோவாக்க முடிவு செய்த ரஜினி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் சிபாரி செய்தாராம்.
ரஜினிகாந்தின் சிபாரிசினால் தான் விசாகனை ஹீரோவாக வைத்து கார்த்திக் சுப்புராஜ் படம் இயக்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...