காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தற்போது காவல் நிலையத்தில் இருப்பது அனைவரும் அறிந்தது தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்த இவர்கள், தற்போது மீண்டும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகிறார்கள்.
தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கூறும் புகாரால், இவர்களது குடும்ப பிரச்சினையை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜி, தனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும், என தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து பாலாஜி கூறுகையில், “என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கிறார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...