விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள புறநகர்ப் பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. விஜயின் 63 வது படமாக உருவாகும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக பூந்தமல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஏராளமான ஊழியர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு 100 உயரத்தில் கிரேனில் கட்டிவைக்கப்பட்டிருந்த அதிக திறன் கொண்ட மின்விளக்குகளில் ஒன்று கழன்று கீழே விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்பவரது தலையில் விழுந்தது.
52 வயதாகும் செல்வராஜ் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, செல்வராஜை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜியை நலம் விசாரித்ததோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.
விபத்தில் சிக்கிய தொழிலாளரை விஜய் நேரில் வந்து பார்த்தது, சினிமா தொழிலாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...