தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்க பல ஹீரோக்கள் விரும்புகிறார்கள். இதனால், நயனின் டைரி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பவர் மறுபக்கம் சோலோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தற்போது ரஜினி, விஜய் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாராவை தனது படத்தில் ஹீரோயினாக்க சூர்யாவும் முடிவு செய்துள்ளாராம்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புது படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்குவதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாம். தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருவதால் நயனிடம் தேதி இல்லை என்றாலும், சூர்யா என்பதால் அவர் தேதியில் அட்ஜெஸ்ட் செய்து நிச்சயம் சம்மதிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...