தற்போது நடந்து முடிந்த ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தந்தை இழந்து வறுமையில் வாடிய போதும், தனது லட்சியப் பயணத்தை தொடர்ந்து ஓட்டப் பந்தயத்தில் தொடர் பயிற்சியை மேற்கொண்ட கோமதியின் வெற்றியை தமிழகமே கொண்டாடி வருகிறது.
தங்கம் வென்றாலும், இதுவரை கோமதிக்கு அரசு சார்பில் எந்த ஒரு பரிசு அறிவிப்போ அல்லது விருதோ அறிவிக்கப்படாமல் இருப்பது, தமிழர்களை கவலைய செய்தாலும், அந்த கவலையை போக்கும் விதத்தில் காமெடி நடிகர் ரோபோ சங்கர், கோமதிக்கு பரிசு அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.
மாணவி கோமதிக்கு நடிகர் ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். கோமதியை பாராட்டும் அனைவரும் ரோபோ சங்கரின் இத்தகைய செயலுக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...