சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற ’களவாணி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விமல், தொடர்ந்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்தார்.
ஆனால், அவரது சமீபத்திய படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது மீண்டும் சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி 2’ வில் நடித்திருக்கும் விமல், இந்த படத்தை ரொம்பவே எதிர்ப்பார்க்கிறார்.
வெற்றிப் படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விமல், ‘களவாணி 2’ வெளியாகி வெற்றிப் பெற்றுவிட்டால், தனது அடுத்தடுத்த படங்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, களவாணி 2 படத்திற்கு விநியோகஸ்தர் ஒருவர் தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர, நீதிமன்றமும் 6 வாரம் காலம் தடை விதித்தது. ஆனால், அந்த விநியோகஸ்தருக்கும் தனக்கும், களவாணி 2 படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை, என்று நீதிமன்றத்தில் இயக்குநர் சற்குணம் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தற்போது களவாணி 2 படத்தின் மீதான தடையை நீதிமன்றம் நீக்கிவிட்டது.
‘களவாணி 2’ படத்தை நம்பியிருந்த விமல், படத்தின் மீதான தடை நீங்கியதால் நிம்மதியடைந்திருக்கிறார். விமல் மட்டும் அல்ல, ‘களவாணி 2’ படம் இயக்குநர் சற்குணத்திற்கும் ஒரு ரீ எண்ட்ரி படமாக அமைவதோடு, தமிழ் சினிமாவில் உதயமான லேட்டஸ்ட் ஸ்டாரான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரையும், நடிகராக மக்களிடம் கொண்டு சேர்க்கும் படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் சில உப்புமா படங்களில் நடித்து, நடிப்பு பற்றிய அனுபவத்தை பெற்ற பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், இனி அப்படியான படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, சின்ன வேடமாக இருந்தாலும், தரமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவருக்கு ‘களவாணி 2’ கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.
படத்தில் அரசியல் வில்லனாக தனது அதிரடியை காட்டியிருப்பவர் ‘களவாணி 2’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகிவிடுவார் என்றும் படக்குழுவினர் கூறி வருகிறார்கள்.
இப்படி பலரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்த இருக்கும் ‘களவாணி 2’ விரைவில் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...