கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் அரசிய நையாண்டி படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பேரனான அருள்நிதி ‘வம்சம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, தொடர்ந்து ‘மெளனகுரு’, ‘டிமாண்டி காலணி’, ‘ஆறாது சினம்’, ‘பிருந்தாவனம்’ என்று அடுத்தடுத்த தனது படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்யும் அருள்நிதி, நடிக்கும் படம் என்றாலே அவை நன்றாக இருக்கும், என்ற மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்திய அருள்நிதி அரசியல் நையாண்டி படம் ஒன்றில் நடிக்கிறார் என்ற தகவல் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்தில் நடித்து வரும் அருள்நிதியின் அடுத்த படமாக உருவாக உள்ள இந்த அரசியல் படத்தை கரு.பழனியப்பன் இயக்குவது இன்னும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, தற்போது அப்படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைக்கிறார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் அருள்நிதி தீவிர அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...