தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார். நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணமான முன்னணி நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, தற்போது திருமணமான நடிகர்களில் யாருக்கு திருமணம் நடக்கவில்லை என்றால், நீங்கள் எந்த நடிகரை திருமணம் செய்து கொள்வீர்கள், என்று பேட்ட்யில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ராசி கண்ணா, சூர்யா தான், ஜோதிகா மேடமிடம் அவர் நடந்து கொள்ளும் விதங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது, அவரை தான் திருமணம் செய்து கொள்வேன், என்று தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...