Latest News :

காத்திருக்கும் எழுத்தாளர்! - கண்டுக்கொள்வாரா விஜய்?
Saturday May-04 2019

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உள்ள விஜயை வைத்து படம் இயக்கவும், தயாரிக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருப்பினும், விஜய் பார்வை யார் மீது படுகிறதோ, அவர்கள் தான் அவரை வைத்து இயக்கவும் முடியும், படம் தயாரிக்கவும் முடியும், என்ற நிலை தான் இருக்கிறது.

 

தற்போது, அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்து வரும், அவரது 63 வது படம் விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் ஒருவர் தான் எழுதிய புத்தகத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதோடு, அதில் விஜயை ஹீரோவாக நடிக்க வைக்க பல மாதங்களாக போராடி வருகிறார்.

 

’தி ஹைவே மாஃபியா’ (The Highway Mafia) என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானவர் எழுத்தாளர் சுஜித்ரா எஸ்.ராவ். இவர் தற்போது இந்த புத்தகத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், இதில் விஜயை ஹீரோவாக நடிக்க வைக்கவும் விரும்புகிறார். அவரை தவிர வேறு யார் நடித்தாலும், இந்த கதைக்கு சரியாக வராது, என்று கூறும் சுஜித்ரா, விஜய் நடித்தால் மட்டுமே, இந்த கதையை திரைப்படமாக எடுப்பேன், இல்லை என்றால், படமாக எடுக்கும் முயற்சியை கைவிட்டுவிடுவேன், என்று கூறியுள்ளார்.

 

மேலும், விஜய் ரசிகர்கள் அளித்த ஊக்கத்தினாலேயே, விஜயிடம் கதை சொல்லும் முடிவுக்கு தான் வந்ததாக கூறுபவர், தான் ஒரு தீவிர விஜய் ரசிகை. உண்மையான ரசிகரை மதிக்கக்கூடிய ஒருவர் விஜய். அதனால் அவர் என் கதையில் நடிக்க சம்மதிப்பார், என்று நினைக்கிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.

 

Writer Suchitra Rao

 

எழுத்தாளர் சுஜித்ரா, தான் அளிக்கும் பேட்டி அனைத்திலும், விஜய் தான் தனது கதையில் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்று கூறி வந்தாலும், இது குறித்து விஜய் தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்போ கருத்தோ இதுவரை வெளியாகவில்லை.

 

காத்திருக்கும் எழுத்தாளரை, விஜய் கண்டுக்கொள்வாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Related News

4753

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery