சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, தற்போது கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க தொடங்கியிருப்பவர், ‘ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திரிஷாவுக்கு பிறகு சினிமாவில் எண்ட்ரியான நடிகைகள் சிலர் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், திரிஷாவுக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பதில் அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். சென்னையை சேர்ந்த தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திரிஷாவின் திருமணம் நின்று போனது அனைவரும் அறிந்தது தான்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன், என்று கூறி வரும் திரிஷா, சமீபத்திய பேட்டி ஒன்றில், என் மனதுக்கு பிடித்த நபரை சந்தித்தால் உடனே திருமணம் செய்துக் கொள்வேன், என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரிஷாவுக்கு வாழ்த்து கூறிய நடிகை சார்மி, ”நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இப்போது சட்டப்படி அனுமதியும் உள்ளது” என தெரிவித்தார்.
சார்மியின் பதிவுக்கு பதில் அளித்த திரிஷா, “நான் அப்போவே எஸ் சொல்லிவிட்டேனே” என்று தெரிவித்துள்ளார்.
திரிஷாவும், சார்மியும் நகைச்சுவையாக திருமணம் பற்றி பேசி வந்தாலும், இதுவே உண்மையாகவும் இருக்குமோ, என்ற சந்தேகமும் ரசிகர்கள் மனதில் தோன்றியுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...